என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Showing posts with label நம்மவர்கள் 1. Show all posts
Showing posts with label நம்மவர்கள் 1. Show all posts

Thursday, February 24, 2011

நம் பல்கலைத் தென்றல்...


இலங்கையில் 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின் தமிழ் நாடக துறை தோற்றம் பெற்றது. இந்த நாடக துறையானது யாழ்ப்பாணம்,கொழம்பு,மட்டக்களப்பு,மன்னார் மற்றும் மலையகம் என பிரதேச ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

  நம் நாட்டின் பல்துறை கலைஞர்களில் ஒருவர் சிறீதர் பிச்சையப்பா, இவர் 1963 ஜீலை 20ஆம் திகதி கொழம்பு கொட்டாச்சேனையில் பிறந்தார். தன் கல்வியை இவர் கொழம்பு விவேகானந்தா கல்லுரியில் பயின்றார். இவர் பிரபல நாடக நடிகர் டி.வி.பிச்சையப்பா வின் மகன் ஆவார். சிறீதர் தனது 11ஆவது வயதில் இலங்கை வானொலியின் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி முலம் நாடகத்துறை பயணத்தை ஆரம்பித்து பிற்காலத்தில் பல்கலை கலைஞராக தோற்றம் பெற்ரார். இவர் ஏராளமான வானொலி,தொலைக்காட்சி,மேடை நாடங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றி நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். நாடகம் தவிர பாடலாசிரியராக,பின்னனி பாடகராக,இயக்குனராக,மிமிக்கிரி கலைஞராகவும் மற்றும் நவீன ஓவியங்கள் வரைவதிலும் முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் தமிழ் நாடகத் துறைக்காக சிங்கள மொழி நாடகங்களை மொழிபெயர்த்து வழங்கினார். பல்கலை தென்றல் சிறீதர் பிச்சையப்பா 2010 பெப்ரவரி 21 இல் தனது 47வது வயதில் சுகவீனம் காரணமாக காலமானார்..

''நம்மர் படைப்புகளை உலகறிய செய்ய இணைவோம்''