என் எண்ணங்களையும், தேடல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.....

Thursday, February 24, 2011

நம் பல்கலைத் தென்றல்...


இலங்கையில் 1948ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்த பின் தமிழ் நாடக துறை தோற்றம் பெற்றது. இந்த நாடக துறையானது யாழ்ப்பாணம்,கொழம்பு,மட்டக்களப்பு,மன்னார் மற்றும் மலையகம் என பிரதேச ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

  நம் நாட்டின் பல்துறை கலைஞர்களில் ஒருவர் சிறீதர் பிச்சையப்பா, இவர் 1963 ஜீலை 20ஆம் திகதி கொழம்பு கொட்டாச்சேனையில் பிறந்தார். தன் கல்வியை இவர் கொழம்பு விவேகானந்தா கல்லுரியில் பயின்றார். இவர் பிரபல நாடக நடிகர் டி.வி.பிச்சையப்பா வின் மகன் ஆவார். சிறீதர் தனது 11ஆவது வயதில் இலங்கை வானொலியின் "சிறுவர் மலர்" நிகழ்ச்சி முலம் நாடகத்துறை பயணத்தை ஆரம்பித்து பிற்காலத்தில் பல்கலை கலைஞராக தோற்றம் பெற்ரார். இவர் ஏராளமான வானொலி,தொலைக்காட்சி,மேடை நாடங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றி நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். நாடகம் தவிர பாடலாசிரியராக,பின்னனி பாடகராக,இயக்குனராக,மிமிக்கிரி கலைஞராகவும் மற்றும் நவீன ஓவியங்கள் வரைவதிலும் முன்னோடியாக திகழ்ந்தார். மேலும் தமிழ் நாடகத் துறைக்காக சிங்கள மொழி நாடகங்களை மொழிபெயர்த்து வழங்கினார். பல்கலை தென்றல் சிறீதர் பிச்சையப்பா 2010 பெப்ரவரி 21 இல் தனது 47வது வயதில் சுகவீனம் காரணமாக காலமானார்..

''நம்மர் படைப்புகளை உலகறிய செய்ய இணைவோம்''

Monday, February 7, 2011

எல்லாம் அவன் செயல்...

என் அன்பு உறவுகளிற்கு வணக்கம் , என் எண்ணங்களை , தேடல்களை உங்களோடு பகிர்வதற்காக என் வலை பதிவை அரம்பிதேன், இருபினும் என் வாழ்வின் அடுத்த படிகளை நோக்கிய பணத்திற்கா சில முயற்சியால் பதிவுகளை இட முடியவில்லை, எனினும் நீங்கள் என்னோடு பகிர்ந்த பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்தேன் ஆனால் சிலவற்றிற்குதான் கருத்துக்களை இட்டேன், சரி விடயத்திற்கு வருவோம் நீண்ட இடைவெளியின் பின் இடும் பதிவானது என் ஊரின் ஆலய உற்சவகால புகைப்பட தொகுப்பாக இடுகின்றேன் {எல்லாம் அவன் செயல்}, 
















Wednesday, August 18, 2010

என் தாய்



           தனி மரமாய் நின்று எமக்கு நிழல் கொடுப்பவளே,
உன் மனச்சுமையை எமக்காக மலர்ப்படுக்கை   ஆக்கியவளே,
                  உன் வழிநீரை எமக்காக உரமாக்கியவளே,
                எம் இலட்சிய பாதையாய் விரிந்தாய் நீயே,
என் பாதையின் தடையில் என் பாதணி ஆனாய் நீயே,
உன் வாழ்க்கையை எமக்காக அர்ப்பணத்தாய் நீயே,
                  உன் கவலைகளை நான் அறிவேன்,
 என் இலக்கின் பாதையில் துயர் துடைக்கும் என் தெய்வத்தை என்றுமே- -போற்றுவேன்......................

"" என் முதல் இடுக்கையை என் மனதின் பிரதிபலிப்பாய் இடுகின்றேன் "" 
               {   "என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.DINUSHAN"  }

Sunday, August 15, 2010

என்றும் உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan

இன்று 15 .08 .2010 நான் இந்த   வலைபதிவை ஆரம்பிக்கின்றேன், இறைவனின் ஆசியுடன், என் தந்தையின் ஆசியுடன், உங்கள் ஆசி,ஆதரவை வேண்டி நிற்கின்றேன்............